மருதமடு அன்னைக்கு மணிமுடி சூட்டப்பட்டதன் நூறாவது ஆண்டு நிறைவை
முன்னிட்டு அன்னையின் திருச்சொரூபமானது மன்னார் மறைமாவட்ட
பங்குகளுக்கு மக்களின் தரிசிப்புக்காக பவனியாக எடுத்து
செல்லப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 6ஆம் திகதி முதல் யாழ்
மறைமாவட்ட பங்குகளுக்கு பவனியாக எடுத்து செல்லப்படுகின்றது.
அதனடிப்படையில் ஊர்காவற்றுறை பங்கிற்கான அன்னையின் தரிசிப்பு
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. அன்று மாலை 6.30 க்கு
ஊர்காவற்துறை முகாம் வீதி சந்தியில் இருந்து பிரதான வீதியின்
ஊடாக புனித மரியாள் பாடசாலை மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி
மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அன்னையானவள்
வரவேற்கப்பட்டு
ஊர்காவற்றுறை
புனித பரலோக அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டு நற்கருணை ஆராதனை
மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இரவு முழுவதும்
மக்கள் தரிசிப்புக்காக அன்னையின் திருச்சொரூபமானது ஆலயத்தில்
வைக்கப்பட்டு மறுநாள் 11ஆம் திகதி காலை 5.30 மணிக்கு
பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன் அடிகளாரின் தலைமையில் , யாழ்
மறைவாட்டத்தின் நிதி முகாமையாளர் அருட்பணி செ.நேசநாயகம்
அடிகளார், குருநகர் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார்,
சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்பணி ஜெகன் குமார் கூஞ்ஞே
அடிகளார், மற்றும் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்பணி யூட்
கமில்டன் அடிகளார் மற்றும் மடு அன்னையுடன் பயணிக்கும் மன்னார்
மறைமாவட்ட குருக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பு கூட்டுத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலியின் நிறைவில்
அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டு பின்னர்
புங்குடுதீவு பங்கிற்கு அன்னையின் திருச்சொரூபமானது பவனியாக
எடுத்து செல்லப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இப்புனித நிகழ்வில் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் மற்றும்
ஏராளமான இறைமக்கள் பலரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை
பெற்றனர். இந்நிகழ்வுகள் யாவும் பங்குத்தந்தையின் ஆலோசனை
மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய பங்குப்பேரவையினர் மற்றும்
இளையோர்கள் முன்னின்று சிறப்பாக ஒழுங்குபடுத்தி இருந்தமை
குறிப்பிடத்தக்கது. |